TNPSC ஆன்லைனில் பதிவு செய்திருப்பவர்கள் Aadhar எண்ணை கட்டாயம் இணைக்க கடைசி நாள்?

TNPSC ஆன்லைனில் பதிவு செய்திருப்பவர்கள் Aadhar எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் - பிப்ரவரி 28 கடைசி நாள்

TNPSC-யில் ஒரு முறை பதிவுக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும் என ஏற்கனவே பலமுறை இதற்கான அறிவுறுத்தலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC வழங்கியுள்ள நிலையில், மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration - OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வாளர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 28.02.2022 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைத்து, எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெயியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Bharathi IAS Academy Trichy

Bharathi TNPSC Center Trichy

www.tnpsctrichy.com


Post a Comment

0 Comments